Wednesday, October 8, 2008

ஒன்னுமே புரியலே உலகத்தில !!!...


உலக சினிமா என்ற போர்வையில் இன்னொரு ஏ.பி.நாகராஜனின் இந்துத்துவா சினிமா

: மு.சிவகுருனாதான் Thanks : adikalai
(இது தாமதமான பதிவாக இருந்தாலும் தவிர்க்க இயலா பதிவு)

தமிழ் சினிமா வெளியாவதற்கு முன்பு மீடியாக்கள் உருவாக்கும் எண்ணற்ற புனைவுகள், கதைத்திருட்டு, நீதீமன்ற வழக்கு போன்றவைகள் மூலம் மக்களிடம் எதிர்பார்ப்பைத் தூண்டும் விளம்பர உத்தியாகவும் உலக சினிமா, தொழில்நுட்ப அசத்தல், பொருட்செலவு போன்ற இன்னபிற விளம்பரங்களுடன் வெளிவந்திருக்கிறது கமல்ஹாசனின் 'தசாவதாரம்' (அதிக பணம் செலவழித்து எடுக்கப்படும் சினிமா சிறந்த உலக சினிமா என்பதைவிட அபத்தம் வேறு இருக்க முடியாது).

10 அவதாரங்கள், 2 ஆண்டுகள் தயாரிப்பு, 70 கோடி செலவு (தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் 700 கோடி செலவில் ஜாக்கிசானை வைத்து மற்றொரு உலக சினிமாவை தயாரிக்கப்போகிறாராம். தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள்!) செய்து தயாரிக்கப்பட்ட இந்தப்படத்தில் 'உலகநாயகன்' என தனக்குத்தானே மகுடம் சூடிக்கொள்ளும் கமல்ஹாசன், ஷங்கர் போன்றோரின் அரைவேக்காடு அயோக்கியத்தனத்திற்கு தானும் இம்மியும் குறைந்தவனில்லை என்பதை தனது முந்தைய குருதிப்புனல், ஹேராம் போன்ற படங்கள் ஊடாகவும் இதிலும் நிரூபித்திருக்கிறார். இப்படத்தின் திரைக்கதை நடந்த சில சம்பவங்களுடன், 12 ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மைச் சம்பவங்களின் ஆதாரங்களைச் சேகரித்தும், எங்கள் கற்பனைகளைக் கலந்தும் அமைக்கப்பட்டுள்ளது" என்ற குறிப்போடு படம் தொடங்குகிறது. உலக உருண்டை வழியே உலக சினிமா உலக நாயகனின் கண்ணுக்குள் குடிபுகுகிறது. " உலகமெங்கிலும் உன்னை வென்றிட யாரு?" என்ற பாடல் ஒலிக்கிறபோது மேடையில் ஜார்ஜ் டபிள்யு புஷ் (கமலின் ஒரு அவதாரம்; பெருமாளின் ஒரு அவதாரமும் கூட,) டான்ஸே ஆடுகிறார். "இனி ஐ. நா-வும் உன்னை அழைக்கும் என்ற பைத்தியக்காரத்தனமும் வேறு. (ஐ.நா.ஆஸ்கார் விருது அளிக்கிற அமைப்பா என்ன?).

மணல் கொள்ளையன் (பி.வாசு.). "உலகத்தை ஒத்தை ஆளாக காப்பாற்ற நீ என்ன உலகநாயகனா? " என்று கேட்கும் போது வின்சென்ட் பூவராகவன் அசடு வழிய, "ஆமாம், நான் உலக நாயகன்தான்" என்று சொல்கிறார். முதல்வர் கருணாநிதி போன்ற பட்டம் விரும்பிகள் இவருக்கு இப்படத்தை அளித்து மகிழ்கிறார்கள். அதற்குப் பதிலாக கமல், 2004 டிசம்பர் 20-ல் தொடங்கி 26-ஆம் தேதி சுனாமியுடன் முடியும் கதையில், விஞ்ஞானி கோவிந்தராமசாமிக்கு கருணாநிதி, மன்மோகன்சிங், புஷ் சகிதம் பாராட்டுவிழாவில் இடம் அளித்து சொரிந்து கொள்கிறார். ஜெயலலிதா சுனாமியைப் பார்வையிடுகிறார். 2008-ல் 'தசாவதாரம்' கேசட் விழாவில் ஜாக்கிசானுடன் கருணாநிதி பங்கேற்றார். அதற்குப் பதிலுதவியா? இல்லை 4 ஆண்டு விஞ்ஞானிக்கு சிறைத்தண்டனையா? "கடவுளை நான் ஏற்றுக் கொள்கிறேனா எனபது பிரச்சனை அல்ல. கடவுள் என்னை ஏற்றுக்கொள்கிற அளவிற்கு நான் நடக்கிறேனா இல்லையா என்பதுதான் பிரச்சனை" (சாய்பாபாவுடனான விழாவில் மு. கருணாநிதி) என்ற கருணாநிதியின் பேச்சுக்கு இணையாக படத்தின் இறுதியில் வரும் வசனம் ஒன்று. "நான் கடவுள் இல்லையின்னு எங்கங்க சொன்னேன். இருந்தா நால்லாயிருக்குன்னுதான் சொன்னேன்". (வருங்காலத்தில் பேருந்துகளில் எழுதி வைக்க பொன்மொழிகள் தயார்!).
"என் பாசத்துக்குரிய தமிழ் மக்களே! இந்தியர்களே!! (?!) என விளித்து கோவிந்தராஜ சுவாமிகள் சாமிக்கதை சொல்கிறார். "யேசுவும், அல்லாவும் இந்தியாக்குள்ளும் அதன் அரசியலுக்குள்ளும் புகாத நூற்றாண்டு, சிவனும், விஷுனுவும் மோதி விளையாடா வேறு கடவுள்கள் இல்லாத காலம். அதனால் அவ்விரு கடவுள்களும் தம் பக்தர்கள் வாயிலாக தம்முள் மோதிக்கொண்ட நூற்றாண்டு " (12 ஆம் நூற்றாண்டு) என்ற கதை சொல்லலில் வரலாற்றுப் புரட்டும் அரசியல் சார்பும் வெளிப்படுத்தப்படுகிறது. இங்கு இன்னொரு ஏ. பி. நாகராஜனாக கமல்ஹாசன் அவதாரம் எடுத்து விஷ்ணுவின் திருவிளையாடல்களை நிகழ்த்துகிறார். சமண - பவுத்தத்தை துடைத்தெறிந்த சைவ - வைணவக் கூட்டணி, சமண - பவுத்தர்களை வேட்டையாடிக் கொன்று குவித்த வரலாற்று உண்மைகள் கவனமாக தவிர்க்க/திரிக்கபட்டுள்ளன. சைவ - வைணவ மோதல்கள் கூட உண்மையான மோதல்கள் அல்ல. அவை சிவன் (அ) பெருமாளின் திருவிளையாடல்கள். சைவ - வைணவர்களுக்குமான உண்மையான எதிரி பின்னாளில் வந்த இஸ்லாமியர்களும், கிருத்துவர்களுமே என்பதை தொடக்கத்திலேயே அடையாளம் காட்டி அந்தத் திசையில் படம் முழுக்க பயணிக்கிறது. "சக நிகழ்வுகளின் கோர்வைதான் உலக சரித்திரம். உலக நிகழ்வுகள் யாவும் ஒன்றுக்கொன்று சம்மந்தமுடையவை" என்றும் "ஓரிடத்தில் படபடக்கும் வண்ணத்துப்பூச்சியின் இறக்கைகள் பிறிதோரிடத்தில் ஏற்படும் மாற்றத்திற்கு காரணமாக இருக்கக்கூடும்" என்ற காயாஸ் தியரியுடன் முடுச்சுப் போட்டு 12 ஆம் நூற்றாண்டில் கடலுக்குள் போன விஷ்ணு 2004-ல் உலகை அழிக்கும் கிருமியை அழிப்பதற்காக சுனாமியாய் வந்து உலகைக் காப்பாற்றியதாக திரைக்கதை அமைத்து காதில் பூ சுற்றி இந்துத்துவ கொடுங்கோன்மைக்கு அரியணை ஏற்றியிருக்கிறார் கமல். இரண்டாம் குலோத்துங்கன் மற்றும் சைவர்களுடன் விஷ்ணு-வுக்காக மோதிப் போராடி கடலில் விஷ்ணுவுடன் சேர்த்துச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்படுகிறான் ரங்கராஜ நம்பி. "வாய்ப்பேச்சில் வீரர்தான் வைணவர்" என்று மன்னனாலேயே பாராட்டப்பெற்று சிவமந்திரத்தை உச்சரிக்க மறுத்து வைணவ மந்திரத்தை உச்சரித்து கடலில் மூழ்கி உயிரைவிடுகிறான். "ரங்கராஜ நம்பி செத்தது சிவனும் செயலும் அல்ல. அந்த நம்பி நம்பியும் பிழைக்காமற்போனது விஷுனுவின் சூழ்ச்சியுமல்ல" என்று விளக்கமளிக்கிறார் கதை சொல்லியான விஞ்ஞானி. எல்லாம் பெருமாளின் திருவிளையாடல்! பின்பு 2004 சுனாமியாய் வெளியே வரும் வரை பல்வேறு சேஷ்டைகளில் ஈடுபடுகிறார் பெருமாள்.
ரங்கராஜ நம்பிக்கு முதல் கல்லடி ஒரு குழந்தையினுடையது. கமலுக்கு குழந்தைகள் மீது ஏன் இவ்வளவு வெறுப்போ தெரியவில்லை? குருதிப்புனலில் குழந்தைகளை அதுவும் " ஜாரே.." பாடிவரும் தேசபக்திக் குழந்தைகளை தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்ப்பது போல காட்சி வைப்பார். " ஜாரே..." பாட்டு இங்கேயும் உண்டு. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கிருமியுடன் பெருமாள் அவதாரம் வரும் விமானம் இறங்கும் பின்னணியில் ஒலிக்கிறது இப்பாடல். என்னே! தேசப்பற்று! கூடவே மதப்பற்றும். "அமெரிக்க செப்டம்பர் 11 க்கு பிறகு தன்னை பயோ ஆயுத தற்காப்புக்குத் தயார்படுத்திக் கொள்கிற மும்மரத்தில் இருந்ததாம். "பாவம் - பாருங்கள்! அமெரிக்காவுக்கு வேறு வழியேயில்லை. உலகமெங்கும் பரவி வரும் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு பயோ ஆயுதம் மூலமே அமெரிக்கா தன்னை தற்காத்துக் கொள்ளமுடியும் என்று கதையளக்கிறார். புஷ்-ஆல் பாராட்டப்படும் விஞ்ஞானியொருவன் இப்படித்தான் பேசமுடியும். அமெரிக்காவின் பயோ வார் ஏதோ செப்டம்பர் 11-க்கு பிறகுதான் என்று சொல்வதைவிட மடத்தனம் வேறு இருக்க முடியாது.
தஞ்சை ராமசாமி நாயக்கர் மகன் விஞ்ஞானி கோவிந்த் ராமசாமி பயோ டெக்னாலஜியில் பி.ஹெச்.டி படித்தவர். ('ரா' அதிகாரி பல்ராம்நாயுடு பயாலஜியில் பி.ஹெச்.டி. என்கிறார்). ரங்கராஜ நம்பியின் மனைவி கோதை, நம்பி கடலில் மூழ்கியதும் தனது தாலியைக் கழற்றி வீச அது சிலையில் தொங்குகிறது. பிற்காலத்தில் அவளே ஆண்டாளாக "முகுந்தா முகுந்தா" பாடும் போது கிருஷ்ண அவதாரத்திலிருந்து கோவிந்த் இறங்கி வருகிறார். ('இருவர்' - படத்தில் மோகன்லாலின் மனைவியாகவும், காதலியாகவும் ஐஸ்வர்யா ராய் வருவார். அதுபோல இங்கு அசின்). அப்போதே கோவிந்தராஜன் - ஆண்டாள் சேர்க்கை முடிவாகிவிட்டது. (அப்போது ஒரு டூயட் வைத்து அசினின் வருத்தத்தைப் போக்கியிருக்கலாம்) பெருமாள், விவரமின்றி செத்துப்போன ரங்கராஜ நம்பிக்கு மாற்றாக மிகவும் விவரமான சூத்திர விஞ்ஞானியால் பதிலீடு செய்யப்படுகிறார்.
"ரா" அதிகாரி பல்ராம் நாயுடுவின் (இந்திரன் - சந்திரன் கமல்) தெலுங்கு பாசத்தின் வழி தமிழ்ப்பாசம் கிண்டலடிக்கப்படுகிறது. கோவிந்த் ஆங்கிலத்தில் பேச பல்ராம் நாயுடு, "தமிழ் எப்படி வாழும்?" என்று கேட்க, உங்கள மாதிரி தெலுங்குக்காரங்க யாராவது வந்து வாழ வைப்பாங்க, விடுங்க" என்கிறார். செல்போனில் தெலுங்குப் பாடல் ரிங்க்டோன். தன் உதவியாளர் தெலுங்கு என்பதை உறுதிப் படுத்திக்கொள்ளுதல். கூரியர் ஆபீஸில் 'நரசிம்மராவ்' என்ற பெயரைக் கேட்டவுடன் தெலுங்கா? என்று கேட்டு 'கன்னடம்' என்று தெரிந்தவுடன் 'ரெண்டு லாங்க்வேஜ்க்கும் ஒரே ஸ்கிரிப்ட் தான்' என்று சமாளிக்கும் பல்ராம் நாயுடு. இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்? இதுவரையும் இனியும் தமிழை வாழவைக்கப் போகிறவர்கள் பிறர்தான் என்றா?
Thanks : adikalai

இது உண்மையா ?




ரஜினி-கலாநிதிமாறன் திடீர் சந்திப்பு: புதிய கட்சி தொடக்கம்?


அக்டோபர் 1-ம் தேதி.... திருவிழாக் கோலம் பூண்டிருந்தது சென்னைப் புறநகர், கேளம்பாக்கத்தில் உள்ள ரஜினியின் பண்ணை வீடு. எங்கு பார்த்தாலும் ரசிகர்கள்! காலை ஆறு மணியிலிருந்தே சுறுசுறுப்பான இந்தப் பண்ணை வீட்டில், சுமார் 7.15 மணியளவில் "படையப்பா' ஸ்டைலில் வந்து இறங்கினார் ரஜினி.
அவரை ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயாணா வரவேற்று உள்ளே அழைத்துச் செல்ல, கூடியிருந்த ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினார்கள். அன்று ரசிகர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்றது.
சென்னை, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்றச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் அத்தனை பேரும் ஆஜராகி இருந்தார்கள். காலையில் வந்திருந்தவர்களுக்கு டிஃபன் அங்கேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலில் டிஃபன், பிறகு ரஜினியுடன் ஆலோசனை என்ற ரீதியில் திட்டமிடப்பட்டிருந்தது.

ரசிகர்கள் கூட்டத்தைப் பார்த்தவுடன், படமெடுக்க ஓர் ஆங்கில டி.வி.யின் கேமராமேன் முயன்றார். அதற்குள் அங்கு வந்த சத்திய நாராயணா, "இதோ பாருங்க ஸார்..... இங்கு நின்னுக்கிட்டு படமெடுக்காதீங்க! வேணும்னா இந்தத் தெரு முனையில் போய் நில்லுங்க. வர்றவங்களுக்கிட்ட என்ன வேணும்னாலும் கேட்டுத் தெரிஞ்சுக்குங்க'' என்று விரட்டாத குறையாக அனுப்பினார்.

இதைத் தொடர்ந்து ரஜினியை அழைத்துச் செல்லும் போதே அவரிடம் ஓப்பனாகப் பேசிய சத்யநாராயணா, "நீங்கள் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இனியும் அரசியலுக்கு வருவதையோ, இயக்கம் ஆரம்பிப்பதையோ தள்ளி வைப்பதை ரசிகர்கள் விரும்பவில்லை'' என்று கூறியிருக்கிறார்.

அதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட ரஜினி, முதலில் திருச்சி ரசிகர்களின் கருத்தைக் கேட்டார். பண்ணைக்குள் தனியாக ஒரு ஹாலில் அமர்ந்திருந்த ரஜினி, ஒவ்வொரு நிர்வாகியாகச் சந்தித்துள்ளார். ஒரே மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் என்றால் கூட, தனித்தனியாகச் சந்தித்துக் கருத்து கேட்டுள்ளார். அன்று அனைவரிடமும் ரஜினி சொன்னது இதுதான்...

"நான் அரசியல் கட்சியை இப்போது ஆரம்பிக்கப் போவதில்லை. அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஆனால் இப்போது ஒரு இயக்கம் ஆரம்பிக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கு ஏற்ற சப்ஜெக்ட் இல்லை. முன்பு, "நதி நீர் இணைப்பு இயக்கம்' ஆரம்பிக்கப் போகிறேன் என்று சொன்னேன்.

அது இப்போது டாப்பிக்கலாக இல்லை. ஆகவே நீங்களே ஒரு "கான்செப்ட்' சொல்லுங்கள். அதற்காக நான் ஓர் இயக்கம் ஆரம்பிக்கிறேன். இவ்வளவு நாளும் நான் ஆரம்பிக்கவில்லை என்று குறை கூறினீர்கள். இப்போது நான் ரெடி. நீங்கள் நமது இயக்கத்தின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள்'' என்று கேட்டாராம் சூப்பர் ஸ்டார்.

இதற்கு மூன்று மாவட்டங்களில் இருந்து வந்த ரசிகர்கள் பெரும்பாலும், "தமிழகத்தில் குடும்ப அரசியலைப் பார்த்துதான் மக்கள் வெறுப்படைந்துப் போயிருக்கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.தே.மு.தி.க., பா.ம.க. இப்படி அத்தனைக் கட்சிகளிலும் குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது. அதனால் நீங்கள் குடும்ப அரசியலை எதிர்த்து ஓர் இயக்கம் ஆரம்பிக்க வேண்டும். குடும்ப அரசியலில் இருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற வேண்டும்'' என்று கூறினார்களாம்.

இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது திடீர் பரபரப்பு! சர்ரென்று காரில் வந்து இறங்கினார் கலாநிதி மாறன். அவரை வரவேற்று அழைத்துச் சென்றார் ரஜினி. ஏறக்குறைய 45 நிமிடங்கள் இருவரும் தனியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். இது முடிந்த பிறகு புறப்பட்ட கலாநிதி மாறனை கார் வரை வந்து கார் கதவைத் திறந்துவிட்டு உட்காரச் சொல்லி அனுப்பி வைத்தார் ரஜினி.

கலாநிதி மாறன்

இப்படி ரஜினியும்-கலாநிதி மாறனும் சேர்ந்து வீட்டிற்குள் இருந்து வெளியே வருவதைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் பெரும் கரகோஷம் எழுப்பி வரவேற்றார்கள். ரசிகர்களிடம் கட்சி அல்லது இயக்கம் ஆரம்பிப்பது பற்றி ஆலோசனை கேட்க கூட்டம் நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் கலாநிதிமாறன் அங்கே வந்தது, ரஜினி ரசிகர்கள் வட்டாரத்தில் மட்டுமின்றி, அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் பிறகு மீண்டும் ரசிகர்களின் கருத்துக் கேட்பு படலத்தைத் தொடர்ந்தார் ரஜினி. அது முடிந்து வெளியில் வந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர், ""சூப்பர் ஸ்டார் எங்களிடம் கருத்தைக் கேட்டாலும்,ஆரம்பத்தில் மிகவும் சோர்வாகவே இருந்தார். கலாநிதி மாறன் வந்துவிட்டுச் சென்ற பிறகு மிகவும் உற்சாகமாக ஆகிவிட்டார். எங்களிடமும் படு உற்சாகமாகப் பேசினார்.

புதிய இயக்கம் ஆரம்பிப்பதற்கான கரு, கலாநிதி மாறன் மூலமாக கிடைத்திருக்கக்கூட வாய்ப்பு உள்ளது. ஆனால் ரசிகர்கள் ஒட்டு மொத்தமாக குடும்ப அரசியலை எதிர்த்து அரசியல் இயக்கம் காண வேண்டும் என்றே வலியுறுத்தியுள்ளோம்'' என்றார். ரஜினி புதிய இயக்கம் ஆரம்பிப்பது உறுதியாகிவிட்டது.

இதற்கு கலாநிதி மாறன் போன்றோரின் ஆதரவும் இருக்கும் என்றே தெரிகிறது. அந்தப் புதிய இயக்கம் "குடும்ப அரசியலை' எதிர்த்துதான் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் எடுத்துச் சொல்லியுள்ளார்கள். "அது ஏற்கப்படுமா? புதிய இயக்கம் ஆரம்பிக்கும் தேதி என்ன....?' இவை தான் இனி ரஜினி பதில் சொல்ல வேண்டிய கேள்விகள்!

எல்.ஐ.சி. பாதுகாப்புப் படை!

மூன்று மாவட்டங்களின் கருத்து கேட்பு படலத்திற்கு வந்தவர்களுக்கு எல்லாம் மதியம் பிரியாணியுடன் முழுக்க முழுக்க அசைவ உணவு தடபுடலாக ரஜினியின் பண்ணையில் பரிமாறப்பட்டுள்ளது. பண்ணை வீட்டுப் பாதுகாப்பு, ரஜினி ரசிகர்களை க்யூவில் நிற்க வைத்து அனுப்புவது போன்ற விஷயங்களை "எல்.ஐ.சி. ரஜினி ரசிகர் மன்ற'த்தைச் சேர்ந்த பாதுகாப்புப் படை வீரர்கள் பார்த்துக் கொண்டார்கள். இப்படிப் பாதுகாப்பு வீரர்களாக நின்றவர்கள் எல்லாம் மஞ்சள் கலர் பனியனில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பண்ணையில் "சிவாஜி?'

"ரஜினி தரிசனத்திற்காக' வெயிட் பண்ணிக் கொண்டிருந்த ரசிகர்களுக்காக ஓர் அறையில் டி.வி. வைக்கப்பட்டு, அதில் முதலில் "அண்ணாமலை' படம் போடப்பட்டதாம். பிறகு "பாட்ஷா' போடப்பட்டதாம். ரசிகர்கள் "சிவாஜி' படம் போடுங்கள் என்று சத்யநாராயணாவிடம் கேட்க, ""அது பற்றிய ரைட்ஸ் இன்னும் நமக்கு ஏ.வி.எம்.மிலிருந்து கிடைக்கவில்லை. தலைவர் வீட்டிலேயே உரிமை கிடைக்காத படத்தைப் போடுவது நல்லா இருக்காது. ஸாரி'' என்று கூறிவிட்டாராம்.
தேங்க்ஸ் : அதிகாலை

Monday, October 6, 2008

மய்லு சொன்ன சரியாதான் இருக்கும் !!!




ரஜினி சிறந்த பண்பாளர் - ஐஸ்!


என் கேரியரில் நான் பார்த்த அதிசய மனிதர் ரஜினி. மிகச் சிறந்த மனிதாபிமானி. எளிமையின் உருவம்.
உலகின் மிகச் சிறந்த நடிகர் என புகழாரம் சூட்டுகிறார் எந்திரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா பச்சன். சமீபத்தில் பெரு மற்றும் பிரேசில் நாடுகளில் நடந்த ரஜினியின் எந்திரன் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு மும்பை திரும்பிய ஐஸ்வர்யா ராய், என்டிடிவிக்கு அளித்த பேட்டி:



பத்தாண்டுகளுக்குப் பிறகு ஷங்கருடன் பணியாற்றும் அனுபவம் குறித்து?



நான் எதிர்பார்க்காத ஒன்று. ஜீன்ஸில் நடித்த பிறகு, தான் எடுக்கும் ஒவ்வொரு படத்திலும் எனக்கு கதாநாயகி வாய்ப்பை வழங்க முன்வந்தார் ஷங்கர். ஆனால் எனக்கிருந்த கமிட்மெண்டுகள் அந்தப் படங்களில் நடிக்கவிடாமல் செய்துவிட்டன.
ரோபோவில் கூட நான் நடிப்பது அத்தனை சுலபத்தில் முடிவாகவில்லை. முதலில் நடிப்பதாக இருந்து, பின் முடியாமல் போய், மீண்டும் நடிக்க ஆரம்பித்த படம் இது.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஷங்கருடன் பணியாற்றுவதை மிகச் சிறந்த வாய்ப்பாகப் பார்க்கிறேன்.



உங்கள் குடும்பத்துக்கும் மிக நெருக்கமான, உங்கள் மாமனார் அமிதாப் மற்றும் உங்கள் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்ட இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த அனுபவம் எப்படி?



ஓ... ரஜினி சார் மிகச்சிறந்த பண்பாளர். யாருடனும் ஒப்பிட முடியாத மிகச் சிறந்த மனிதாபிமானி.
உலகின் மிகச் சிறந்த நடிகர் அவர் எனலாம். மிகச் சிறந்த நடிகர்களின் மொத்த உருவாமாக அவரைப் பார்க்கிறேன். அவர் பழகும் விதம், சக நடிகரை நடத்தும் பண்பு எல்லாமே என்னைப் பிரமிக்க வைத்தது.
எளிமை என்றால் என்னவென்பதை அவர் மூலம்தான் நான் நேரில் தெரிந்து கொண்டேன். அவரது பண்பு என்னை வியக்க வைக்கிறது.
ஒரு ஷெட்யூல்தான் நடித்திருக்கிறேன் அவருடன். அதிலேயே என்னால் அவரது உன்னதமான பண்புகளைப் புரிந்து கொள்ள முடிந்தது.
ரஜினியுடன் நடித்தது வாழ்க்கையில் எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அவர் மீது எனக்குள்ள மரியாதையைச் சொல்ல வார்த்தைகள் இல்லை என்றார் ஐஸ்வர்யா ராய்.

Thanks : Vidupu

ரஜினி டயரி பழக்கம் !!! ரோபோ ?!!!




தினசரி டயரி எழுதும் பழக்கத்ைதக் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், ஷங்கர் வைத்த ஒரு கோரிக்கையை கடைப்பிடிப்பதற்காக டயரி எழுதுவதையே நிறுத்தி வைத்து விட்டாராம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எளிமைக்கும், பெருந்தன்மைக்கும் பெயர் போனவர். அவருக்கு டயரி எழுதும் பழக்கம் உண்டு. தினசரி வாழ்க்கையில் தனது அனுபவங்களை எழுதி வைத்து வருகிறார் அன்றைய தினத்தில் தான் சந்தித்த அனுபவங்கள், நடந்த சம்பவங்கள் உள்ளிட்டவற்றை உள்ளது உள்ளபடியே எழுதுவது அவரது ஹாபி.
பின்னர் அதைப் படித்துப் பார்த்து தன் மீது ஏதாவது குற்றம், குறை இருந்தால் திருத்திக் கொள்வாராம் சூப்பர் ஸ்டார்.
சிவாஜி படப்பிடிப்பின்போது தனக்கு ஏற்பட்ட தினசரி அனுபவங்களையும் அவர் எழுதி வைத்து வந்தார். பின்னர் மேக்கிங் ஆப் சிவாஜி என்ற நூலை எழுதிய ஒருவருக்கு, ரஜினியின் இந்த டயரி பழக்கம் வெகுவாக உதவியதாம்.
இதுகுறித்து கேள்விப்பட்ட ஷங்கர், சிவாஜி குறித்து யாருக்கும் தெரிவித்து விட வேண்டாம் என ரஜினியை கேட்டுக் கொண்டாராம்.
ரஜினி நினைத்திருந்தால் ஷங்கர் கோரிக்கையை லூஸில் விட்டிருக்க முடியும். இருந்தாலும், ஷங்கர் கேட்டுக் கொண்டாரே என்பதற்காக அதை உடனே ஏற்றுக் கொண்டாராம். அத்தோடு நில்லாமல், டயரி எழுதுவதையே தற்காலிகமாக நிறுத்தி விட்டாராம்.
இதுகுறித்து ஷங்கர் கூறுகையில், இதுதான் ரஜினி. அவர் நினைத்திருந்தால் நான் கூறியதை நிராகரித்திருக்க முடியும். என்னாலும் ஒன்றும் செய்திருக்க முடியாது. ஆனால் ரஜினி அப்படிச் செய்யவில்லை. என்னை ஏமாற்றவோ, நிராகரிக்கவோ அவர் விரும்பவில்லை. மாறாக டயரி எழுதுவதையே நிறுத்தி கொண்டார் என்று கூறியுள்ளார்.



இதேபோல, எந்திரன் படப்பிடிப்பு குறித்த தகவல்களை உங்களது கணவரிடம் கூட தெரிவித்து விட வேண்டாம் என ஐஸ்வர்யா ராயிடம் ஷங்கர் கேட்டுக் கொண்டுள்ளாராம்.
எந்திரன் படத்திற்காக 200 நாள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் ஐஸ்.


Thanks : viduppu

Wednesday, October 1, 2008

மகாத்மா காந்திஜி வரலாறு 100 படங்களில்!!!

நான் மஹான் அல்லோ !!!- OCT -2
MAHATMA IN 100 PICTURES
CLICK ON THE LINK BELOW TO SEE THE FLASH MOVIE

Monday, September 29, 2008

ரஜினி மற்றும் மணி ரத்னம் இணைந்தால் ...!

WHY SHOULD RAJINIKANTH & MANI RATHNAM SHOULD WORK TOGETHER ?!!!


In retrospect, Rajini and Mani might have lost out on a golden opportunity. The last time they came together was for “Thalapathy” in 1991.It was a contemporary version of the story of Karna taken from the Mahabharata. Mani presented a very mellow and sensitive Rajinikanth, sans his usual mannerisms and histrionics. We saw Rajini the “actor”, rather than Rajini the “phenomenon”. Rajinikanth delivered a stellar performance (one of his best to date) in spite of a stalwart like Mamooty performing alongside him. Some critical reasons as to why Mani and Rajini should join forces after sixteen years:
• They both possess a tremendous fan following all over the world, arguably the biggest for an actor and director respectively. Expectations will be sky high, giving the trade the biggest opening possible.
• They are internationally acclaimed doyens of Tamil cinema, capable of creating the largest platform ever to market an Indian movie overseas.
• Rajini is renowned for his larger-than–life roles, and Mani is a director who thrives on scripting such characters, with his pragmatic and minimalistic approach, be it Velu Nayakar of “Nayagan” or Gurubhai of “Guru”. It will be a match made in heaven! • It would be a true challenge for both Mani and Rajini, driving them to deliver their personal best. We can expect nothing short of excellence and perfection in every department.
• Mani is capable of bringing out the best in any actor and Rajini is a director’s delight, surrendering himself completely to a director he trusts, making it a lethal combination.
• The present day audience is mature, refined and has an appetite for tasteful and innovative cinema. Rajinikanth in a Mani Ratnam movie is the best they can ask for. A solid story lays the foundation for a successful film and hence to take our argument to the next level, we also compiled a list of scripts that might work for this talented duo:
Script 1: The safest bet - A cinematic memoir, based on a powerful and charismatic real - life personality in tandem with the Superstar’s image, this would be like performing on home ground for both of them.
Script 2: There was a serious consideration a few years ago by Mani Ratnam to cast Rajinikanth in a movie a la James bond style. It was supposed to be called “Ragasiya Police”. This project, for reasons unknown never materialized and was ultimately shelved. This script could be revived with a contemporary feel, as a romantic suspense thriller, based on the life of a secret service agent who has taken on the mission of annihilating a powerful enemy. Script 3: Mani being the master political director, and his fan fraternity ever aspiring for him to foray into politics, Rajinikanth as an enigmatic, political celebrity, who brings about changes to the system, would be a treat for all his admirers.
Script 4: A superhero in a sci-fi thriller, on the lines of Spiderman or Superman would have his tiny tot fans go wild with delight. This would also be a visual extravaganza for all Rajini addicts, who already envision him as a champion of the masses.
Script 5: Now for the nonconformists, a simple, sweet and lucid story about family, relationships and love featuring Rajini in a completely different avatar, of a loving father or a devoted husband, complementing his age and experience with some magical music, will definitely be a breath of fresh air to all Rajini buffs.
After all, isn’t the Superstar a doting father and a caring husband in real life too? One would need immense courage to craft such a radically different movie after “ROBOT”, but then, doesn’t fortune favor the brave?
Their union, if it had materialized would have undoubtedly been one of most incredible things to have happened to Tamil cinema or perhaps Indian cinema in recent times. Let us hope for the best. Who knows what the future holds, NOTHING IS IMPOSSIBLE, right?!



Thanks : http://thebollywoodactress.com/kollywood-hot-news/why-should-rajinikanth-and-mani-ratnam-work-together.php

Sunday, September 28, 2008

ஈ அடிச்சான் காபி என்பது என்ன ?

வாங்கிவிட்டீர்களா ! அமுதம் !!!

கண்டுபிடிச்சேன் !கண்டுபிடிச்சேன் .....

இது ஒரிஜினல் :


இது XEROX:(COPY)





சினிமாவ காபி அடித்தால் மட்டும் நக்கலா !!!














பாப்பா 9 ஆம் வகுப்பு தான் படிக்குதாமே!!! [ இது எப்படி இருக்கு !!! ]

பரட்டை Comment :
9 - தாவது படிகட்டும்! எத்தினி வருசமானு சொல்லவே இல்லை ! இது எப்படி இருக்கு !!! படம் : ACTRESS அன்சிகா

















Friday, September 26, 2008

மனம் விரும்பும் பாடல் ... (ரஜினி) திருக்குறள் !!!


........

"நான் உண்டு , வீடுண்டு ,நாடுண்டு,வாழ்வுண்டு என்றேதான் இருந்தேனடி !

நாள்லாகா நாள்லாகா தாளாத கோபத்தில் நான் வேங்கை அனேன்னடி !!!".......

படம் : பொல்லாதவன்

ஆண்டவன் சொல்றான் !!!...



ரஜினி ஒரு முறை சொல்ல கேட்டது !!!


WHEN AMBITION ENDS , HAPPINESS BEGINS !!!


Wow! உண்மை !

BHARATHA PRIYAN


Tuesday, September 23, 2008

ரஜினி எதிர்பார்ப்பு !!!




குடும்பம், naadu , தனி திறன் :



1) தான் மற்றும் , தன்னை நம்பி இருக்கும் குடும்பம் மக்கள் சேவைக்கு வருவதனால் பாதிப்படையாத வகையில் இருக்கிறோமா!


2) Namathu கடமைகள் (likeவருமான வரி,சொத்து வரிetcநன்றி rajinifans.காம் ஒழுங்காக செய்கிறோமா.முடிந்த வரை மனசாட்சிக்கு நேர்மையாக இருக்கிறோமா.


3)நாளை நமக்கு சில பொறுப்புகள் ஒப்படைக்க பெற்றால் அதை நம்மால் நிறைவேற்ற நமக்கு தெரியுமா அல்லது "பயற்சி " தேவையா.


4)நீங்கள் வசிக்கும் தொகுதி , வட்டம், போன்றவற்றின் தகவல்கள் எழுத்து வடிவில் இருக்கிறதா .(likeமக்கள் எண்ணிக்கை ,வறுமை கோட்டுக்கு கீழ் உண்மைலே இருப்பவர்,etc...)


5)உங்கள் ஏரியா வில் இருக்கும் பிரச்சினைகள் , அடிப்படை வசதி குறைவு,...அவற்றுக்கான minimumதீர்வு அனைத்தும் எழுத்து வடிவில் இருக்கிறதா.


6)எழுத்து வடிவம் ஏன் என்பது உங்களுக்கு புரியும் என்றே நம்புதிறேன்(அவை தலைவரிடத்தில் அதிக நம்பிக்கை உருவாக்கும்)


7)வட்டம் , மாவட்டம் என்ற பார்வை மட்டும் இல்லாமல் தேசியம் என்ற பார்வை இருக்கிறதா அப்படி எனில் நாட்டின்,அண்டைய மாநிலத்தின் பிரச்சினைகள் என்ன, சர்வதேச பிரச்சினைகள் என்ன இருக்கிறது இந்தியாவுக்கு , அவற்றில் நமது நிலை பாடு என்ன போன்றவற்றை அலசி கட்டுரை ,எழுத்தாக ஒப்படைக்க வேண்டும்.


8)வாய் அளவில் ஆம் போடுவது, அந்த காலம் மக்களுக்கு இன்றைக்கு இருக்கும் நம்பிக்கை இன்மை நாம் அவர்களுடன் ஒப்பந்தம் போட வேண்டி இருக்கும் நான்-சரி இல்லை என்றால் என்னை பதவி நீக்கலாம் போன்றவற்றை நமது தலைவருக்கும் தெரிய படுத்தலாம்.


9)அர்ப்பணிப்பு அதாவது நீங்கள் எத்தனை விளையாட்டு வீரர் கலை , சமுக சேவகர்களை உங்கள் ஏரியா வில் உருவாக்கி மாநில போட்டி,தேசிய போட்டி அல்லது சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வைக்க போகிறிர்கள் .


10)விவசாயம் மற்றும் கிராம புறங்களில் என்ன புரட்சி செய்ய போகிறிர்கள்


ippadi மேலும் எழுதிகோண்டே போகலாம் ரசிகர்களே,நண்பர்களே ,முதலில் இவற்றை துவங்குவோமே.இவை மட்டுமே தலைவருக்கு நம்பிக்கை கொடுக்கும் செய்யல் ஆகும் என்று நம்புகிறான் இந்த ரசிகன் .மேலும் நாம் இப்பொது மன்றமாக செய்யும் நற்பணிகளை குறைவாக மதிப்பிட வில்லை .நாம் செய்ய வேண்டிய களப் பணிகள் தான் பகிர்ந்து கொண்டேன் .


நினைத்து பாருங்கள் இத்தகைய அனைத்து தகவல்களுடன் சென்று அனைத்து மாவட்ட,வட்ட ரசிகர்களும் ஒப்படைத் thaal ரஜினி வேண்டாம் என்று சொல்லபோவதில்லை அது சமுக சேவை ஆகட்டும் அல்லது அரசியல் ஆகட்டும்.


bharathaPRIYAN

ரோபோ பாடகர் பேசுகிறார்!!!


ரோபோ -வின் பாடகர் சொல்கிறார் ....

ASPI: Any arrangements in your recent work that you think really stand out?
Clinton: I’ve recently arranged a song for Mr. Rahman for his new film "Robot" - a cool song, which features some cool Afro style backing vocals.I just sang with Kunal an acapella song for the Hindi version of Rahman’s Tamil hit film “Boys”.

மேலும் 2 படங்கள் ரோபோ



ரோபோ Rajini வித்தியாசமான டிசைன் s!!!